பின்பற்றுபவர்கள்

21 ஆகஸ்ட், 2008

பிரிதல்

பிரிதல்


இரவுக் காற்றில் மனித முறையீட்டின் பாங்கொலி.
பாறைகளைத் தழுவும் ஆற்றின் குரல்.
ஓயாது சலியாது
பள்ளத்தாக்கின் பாறைகளும் ஆறுகளும் செய்யுமோ காதல்?

மலைகளைப் படலமிட்ட புல்வெளியில்
விழுகிறது என்னிதயம்.

உன் விழிகளுக்கு ஒளியென்னும் அர்த்தம்
இல்லையென்றுணராமல் போனேனே!

மலைகளை மோதிக் குளிரில் உறையுமோ காதல்?

நாளை நான் போய் விடுவேன்
தடுமாற்றம் நிறைந்தது இவ்விரவு - உனக்கு.

இருளான இதயங்களுக்குள் நீ
சிறுசுட்டி - நின்றெரியும் அதன் சுடராகவாவது ஆகியிருக்கலாம்

நீயும் என்னை மறந்தாய்.

சமரசங்களுக்கும் ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டதென் ஆத்மா.

முன்னறையில் இருந்து
பிரியும் என் முதுகைப் பார்த்திரு!

புரட்டாதி - 1993

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக