பின்பற்றுபவர்கள்

பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 செப்டம்பர், 2011

ஒரு கவிதை எங்கே முடிகிறது...





இன்று அல்யசீரா  வெளியிட்ட  போருக்குப்பிந்திய  இலங்கை நிலவரம் பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அல்யசீராச் செய்தியாளர் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிடம்  இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி கேட்கிறார். கைது செய்யப்பட்டவர்களை சுட்டுக்கொல்லும் ஓளிநாடாக்களை பற்றிக் கேட்கும் போது அவை பொய்யானவை என நாக்கூசாமல் பொய் கூறுகிறார். அவரால் அவ்வாறானதொரு  ஈனத்தனமான பதிலைச் சிரித்துக் கொண்டு கூற முடிகிறதொன்றும் உலக அதிசயமல்ல.

உலகத்தில் மக்களின் தலைமீது ஏறி அமர்ந்திருக்கிறஎல்லா அதிகாரங்களும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றன என்பதற்கு என்னுமொரு நல்ல உதாரணம் பகரேனிய பெண் கவிஞரும் செயற்பாட்டாளருமான  அயத்-அல்-ஹெர்மெசி (20 வயது).

 40 வருடங்களாக பஹரேன் நாட்டை ஆண்டு வரும் அல் கலிபா குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் பஹரேனில் இந்த வருடம் மாசிமாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு வருகிறது.

பஹரேனின் தலைநகரமான மனமாவின்  முத்து சதுக்கத்தில் நிகழ்ந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது தற்போதைய ஆளும் அரசின் பிரதம மந்திரியான கலிபா இப்ன் சல்மான் அல் கலிபாவை கண்டித்து அயத் கவிதைகளை  எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை அவமானப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் கடிதங்களையும் ஈ-மெயில்களையும் அவர் பெறத்தொடங்கினார்.  இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவர் மனமாவின் பொலிசை அணுகி முறையிட்டபோது பொலிஸ் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் திருப்பியனுப்பப்பட்டார். இதனால் அச்சமடைந்த அயத் தலைமறைவானார். இந்த வருடம் பங்குனி மாதத்தின் இறுதிப் பகுதியில் அயத்தின்  வீட்டை இரண்டு தடவைகள் முற்றுகையிட்ட பகரேனின் பாதுகாப்புப் படையினர்  அயத்தின் மறைவிடத்தை தெரியத்தராவிடின் அயத்தின் குடும்பத்தினர் எல்லோரையும் சேர்த்து வீட்டுடன் தரைமட்டமாக்கப் போவதாகவும் அது மேலிடத்து உத்தரவு என்வும்  அச்சுறுத்தினர். மோசமான அச்சுறுத்தல்களுக்கு பின்னர் குடும்பத்தினரிடம் இருந்து அவரது மறைவிடத்தைப் பாதுகாப்பு படைகள் அறிந்து கொண்டன.
இதன் பின்னர் அயத் தொடர்பான எந்தத் தகவல்களும் தொடர்புகளும் குடும்பத்தினருக்கு இல்லாது போய்விட்டன.

அயத் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தேடுதல்களை ஆரம்பித்த போது பொலிசார் அயத் தொடர்பான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனக் கூறியதுடன் அயத் காணாமல் போய்விட்டார் என குடும்பத்தினரே ஒப்புதல் கடிதம் தரவேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
ஏப்ரல் நடுப்பகுதியில் அயத் குடும்பத்தினருக்கு வந்த அனாமதேய தொலைபேசி ஒன்று அவர் இராணுவ வைத்திய சாலையில் கோமாவில் இருப்பதாக அறிவித்தது. அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் அயத் பலதடவைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமையால் கோமாவுக்குள்ளானதாகவும் பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்ததாகவும் கூறினர்.
கடந்த மாசி மாதத்தில் இருந்து அயத் மட்டுமல்ல இன்னும் பல பெண்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கானவர்கள் குறிப்பாக வைத்தியர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மாணவர்கள் போன்றவர்கள் பகரேன் படைகளினால் கடத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது போன்ற விடையங்கள் இதுவரையும்  வெளிவரவில்லை.

கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சவுதி அரேபியாவின் பொலிஸ் படை பகரேனுக்கு உதவுவதற்காக மனமாவுக்குள்ளே நுளைந்தது. 
பகரேன் நாட்டுப் படைகள் சவுதி அரேபிய படைகளின் உதவியுடன் நாடு தழுவி நடந்து வரும் எழுச்சிகளை கொடுமையாக அடக்கி வரும் இந்த வேளையில் அயத்தின் மரணம் சம்பவித்துள்ளது.
பகரேன் படையினரால் கடத்தப்படுபவர்கள் கடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.  மின்சார அதிர்ச்சி கொடுத்தல் கடுமையாகத் தாக்குதல் பட்டினி போடுதல் தலைகீழாக கட்டித் தொங்கவிடுதல் போன்ற சித்திரவதைகளின் பின் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளும் படி தாம் வற்புறுத்தப்பட்டதாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறி உள்ளனர்.  இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களை இலகுவாக நீதி மன்றத்தின் முன் நிறுத்த பகரேன் பொலிஸ் முயன்று வருவதாக மனித உரிமை வாதிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கோத்தபாய போலவே இந்தக் குற்றச் சாட்டுக்களை பகரேன் அரசின் பொறுப்பதிகாரி மறுத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் சித்திரவதைப் படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமாக புனைந்த கதைகளைக் கூறுவதாகவும் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவிலும் அதனைச்சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறித்து மேற்குலகம் வார்த்தையாடல்களுடன் நின்றுவிடுகின்றது. மேற்குலகம் இன்றைக்கு ஐக்கிய நாடுகளினூடாக இலங்கைக்கு கொடுக்கிற அழுத்தம் போல பகரேனுக்கோ ஓமானுக்கோ சவுதி அரேபியாவுக்கோகொடுப்பதில்லை. ஏனெனில் சவுதி அரேபியாவில் எற்படக்கூடிய ஸ்திரமின்மை மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாகப்பாதிக்கும் என்பதாலாகும்.  உலக எண்ணை உற்பத்தியில் 25 சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்தே வருகிறது.  அமெரிக்காவும் ஐரோப்பாவும் பெருமளவுக்கு சவுதி அரேபிய எண்ணை  ஏற்றுமதியையே நம்பியுள்ளனர். ஏற்கனெவே மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் எழுச்சி காரணமாக/ ஸ்திரமின்மை காரணமாக  உலகளாவிய ரீதியில் எண்ணை விலை உயர்ந்துள்ளதுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.  இந்த விலையுயர்வு இனியும் அதிகரிக்குமெனில் மேற்குலகில் சமூக நல உதவிகளில் தங்கி இருக்கும் அடித்தட்டு மக்கள் தமது  வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாது தமது அமைதியை கலைக்க நேரிடும் என இந்த நாடுகள் அஞ்சுகின்றன.
.
மேற்குலகின் மனித உரிமை வேடத்திற்கும் காட்டுமிராண்டித்தனமான ஆசிய ஆபிரிக்க ஆட்சியாளர்களீன் அதிகார வெறிக்கும்  இடையில் தமது  வாழ்வாதாரத்தையும் சனநாயகத்தையும் தேடி நிற்கும் மக்களுக்காக அயத் போன்றவர்கள் எழுதும்  கவிதைகள்  அவர்களுக்கு  அவலமான மரணத்தைத் தருகின்றன.

இந்தக்கவிதைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்ற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் இருக்கின்றன ஆனால் ஒரு கவிதை எங்கே முடிகிறது என்ற கேள்விக்குப் பதில் அயத்திடமும் அவரைப்போன்று அதிகாரத்திடம் போரிட்டு மடிந்த ஆயிரக்கணக்கான கவிஞர்களிடமும் மட்டுமே இருக்கிறது.

ஒரு கவிதை எங்கே முடிகிறது?
அங்கே... அதோ...
"நிறுத்து" என்றறிவித்தற் பலகையை நீட்டியபடி
சீருடை அணிந்தவொருவன் மறிக்கிறானே!
அங்கே...
தேவஅபிரா

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவஅபிரா

15 ஜனவரி, 2011

ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள்,

செய்தி சொல்லும் செய்திகள் II

 
செய்தி சொல்லும் செய்திகள் II  ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள் - GTNற்காக தேவன்

 
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வாழும் நாட்டில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்த சில செய்திகள் பற்றி எனது நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பின்வருமாறு கூறினார்.
 
“உவன் செய்த அநியாயத்திற்குத்தான் கோமாவில கிடந்து அனுபவிக்கிறான் கடவுளாப்பாத்து கொடுத்த தண்டனை. உவன் இன்னும் அந்தரிக்கவேணும்”
 
யாரைப்பற்றி நண்பர் குறிப்பிடுகிறார் என நீங்கள் யோசிக்கிறீர்கள்!
 
இந்தக் கிழமையுடன் சரியாக ஜந்து வருடங்களாக இஸ்ரேலிய முன்னை நாள் பிரதமர் ஆரியல் சரோன் (Ariel Sharon) கோமாவில் இருக்கிறார்.  கடந்த ஜந்து வருடங்களாகச் செயற்கையான முறையில் உயிர்தரிக்க வைக்கப்பட்டுள்ள Ariel Sharon சரோன் பாலஸ்தினியர்கள் மீதான ஓடுக்கு முறைகளை தீவிரப்படுத்தியவர்.
 
எனது நண்பரின் கருத்துப்படி பலஸ்தீனியர்களுக்கு அவர் செய்த அட்டூழியத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையே அக் கோமா. எமது ஈழத்து அரசியலிலும் அவ்வப்போது இவ்வாறான எதிர்பார்ப்புக்களைக் கேட்கிறோம். 
 
அடாது செய்தவன் படாது படுவான்.. தன்வினை தன்னைச்சுடும்... இது போன்ற பழமொழிகள் எமது உணர்வுகளுக்கு வடிகாலமைத்துவிடுவதை அவதானிக்கிறோம்,
 
எனது நண்பனின் தர்க்கவியல் சரி என்றால் இலங்கையில் கோமா வந்து படுக்க வேண்டியபலரைப் பட்டியலிடலாம். மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா, டக்லஸ், கருணா என அந்தப்பட்டியல் நீளும்!
 
விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறானதொரு பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
 
உலக வரலாற்றில் தமது தவறுகளுக்காகவும் கொடூரமான அரசியல் செயற்பாடுகளுக்காகவும் தண்டிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆண்டவன் தான் காரணம் என நான் நம்பவில்லை.
 
ஏனெனில் உலகின் மிகப் பெரியபயங்கரவாதிகளான அமெரிக்கத் தலைவர்கள் எல்லோரும் சகல செளகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது சந்தோசமாகவே செத்துப் போயிருக்கிறார்கள்.
 
விடுதலைப் புலிகள் தாம் உயிர்ப்புடன் இருந்தவரை தமது அரசியல் எதிரிகளை ஆண்டவனைத் தண்டிக்க விடாமல் தாமே தண்டித்துக் கொண்டிருந்தார்கள்.
 
லலித், பிரேமதாச, காமினி, ராஜீவ் காந்தி என அவர்களின் தண்டனை பட்டியலில் பூர்த்தி செய்யப்பட்டவர்கள் மரணமடையாது இருந்திருந்தால் அவர்களின் தவறுகளுக்காக நியாயமான தண்டனைகளைப் பெற்றிருப்பார்களா என்பது மறுபுறத்தில் சந்தேகமே! 
 
உலக அரசியல் வரலாற்றில் ஆதிகாரஅரசியலில் தமக்கு சாதகமான இடங்களை எடுக்க முடியாதவர்கள், அதிகாரத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் தமது தவறுகளுக்கான  தண்டனைகளை சிலவேளைகளில் அடைகிறார்கள்.
 
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சில ஆபிரிக்க அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்கள்,  முன்னைநாள் கம்யூனிசத் தலைவர்கள், சேர்பிய அரசியல் மற்றும் சில இராணுவத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றறத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலான குற்றவாளிகள் அப்பாவிகளைத் தண்டித்துக் கொண்டு மூக்கும் முழியுமாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 
ஆரியல் சரோனின் பிழையான உணவுப்பழக்கம் காரணமாகவே அவரது மூளைக்கு குருதி வழங்கும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே கோமா ஏற்பட்டது என்றும் கூறிய போது என் நண்பனின் முகம் சற்றே இருண்டு போனது.
 
இன்னுமொரு செய்தியும் எங்களது உரையாடலுக்குக் களமானது.
 
அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் அமெரிக்க நடிகரான ஜோர்ச் குளோனி(George Clooney) பின்வருமாறு கூறுகிறார்.
 
“நாங்கள் கொங்கோவைத் தவறவிட்டோம் ருவண்டாவைத் தவறவிட்டோம் ஏன் டாவூரையும் தவறவிட்டோம்.   போர் தொடங்குவதற்கு முன்னம் அதை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கொங்கோவிலும் ருவண்டாவிலும் டாபூரிலும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்குப் பிந்திவிட்டோம்"
 
இதனை அவர் “ The World is Watching (உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது)”என்னும் செயற்திட்டத்திற்கு உதவியளித்து வெளியிட்ட வீடியோச் செய்தியிலேயே குறிப்பிட்டார்.
 
இச் செயற்திட்டம் சூடானை மையப்படுத்தியே தொடங்கப்பட்டுள்ளது.
 
ஏதிர்வரும் திங்கட்கிழமை தென் சூடானில் சர்வசனவாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது.  தென்சூடான் சூடானின் ஒருபகுதியாக இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பே அதுவாகும்.
 
தென் சூடான்(கிறிஸ்தவ ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்) நீண்ட காலமாக வடசூடானின் (அராபிய அரசியல் தலைமைகளால் நிர்வகிக்கப்படும்பகுதி) ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர்.   வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் கடந்த காலங்களில் நடந்தேறின.ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்கு தெரிய வந்தது. தற்போது நடைபெறவிருக்கும் சர்வசன வாக்கெடுப்புகாரணமாக சூடானில் மீண்டுமொரு வன்செயல் நிகழலாம் என உலகம் அஞ்சுகிறது "உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது-The World is Watching” என்னும் செயற்திட்டத்தின் கீழ் தெற்கு மற்றும் வடக்கு சூடான் எல்லையை கடந்து செல்லும் சகல வர்த்தகச்செய்மதிகளும் அந்தப் பிரசேதத்தில் பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளையும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளையும் கண்காணிக்கும்,
அழிக்கப்பட்ட கிராமங்கள் குண்டு வீசப்பட்ட பிரதேசங்கள் மற்றும் செறிவான மனிதப் படுகொலைகள் நிகழக் கூடிய சாத்தியங்களை அவதானித்து இச்செய்மதிகள் தகவல்களைத்திரட்டும் இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களையும் படங்களையும் கூகுள் மற்றும் இணையத்தளவடிவமைப்பு நிறுவனமான Trellon ஆகியவற்றின் உதவியுடன் ஜக்கிய நாடுகள் சபையின் செய்மதிச்செயற்திட்டம் (UNOSAT) ஆராய்ச்சி செய்து தெளிவான தகவல்களாக  www.satsentinel.org. என்னும் இணையத்திற்கு வழங்கும்.  இதன்மூலம் இணைய வசதி உள்ள எவரும் சூடானில் நிகழும் எந்த வன்முறையையும் 36 மணித்தியாலத்திற்குள் காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச்செய்தியை வாசித்த பின்னர் எனது நண்பர் கேட்டார்: “முள்ளிவாய்க்காலையும் நாங்கள் தவறவிட்டுவிட்டோம்” என ஜோர்ச் குளோனி ஏன் சொல்லவில்லை”
 
அவருக்கு தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதே தெரிந்திருக்குமோ தெரியாது என்றேன்.
 
நாடுகடந்து இருக்கிற தமிழர்களிடம் சொல்லிக் குளோனியுடன் கதைக்கலாமே என்றார்.
 
நாடுகடந்த தமிழர்கள் பலகுழுக்களாகப் பிரிந்து தமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை நாடினால் இன்னொருவருக்கு பிடிக்காதென்றேன்.
 
நாசமாய் போகவென்றார்!  என் நண்பர்.
 
GTNற்காக தேவன்
08/01/2011

10 ஜனவரி, 2011

ஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரமும்…



 ஆசிய நாடுகளுக்கான தனது ஒன்பது நாட்பயணத்தின் முதற்கட்டமாக ஒபாமா நேற்று இந்தியாவை சென்றடைந்துள்ளார்.


நேற்று அவர்  2 வருடங்களின் முன்பு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 மக்கள் பலியடைந்த தாஜ்மகால் விடுதியை பார்வையிட்டதுடன் மஹாத்மா மகாத்மா காந்தி  நினைவுப்பொருட்கள் காட்சிச்சாலையையும் பார்வையிட்டார்.

ஓபாமாவின் ஆசிய பயணத்தின் பின்ணணியில் பல்வேறு நோக்கங்கள்  இருக்கின்றன.
முக்கியமாக  மேலெழுந்து வருகின்ற சில விடையங்களை இங்கே கவனிப்போம்.


பனிப்போர் முடிவின்பின் அமெரிக்காவை மையப்படுத்திய‐ பயங்கர வாதத்திற்கெதிரான போரை மையப்படுத்திய‐ உலக ஒழுங்கு தோன்றியது. ஆனால் அது  வேகமாக மாற்றமடைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று தோன்றி வருகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட, அமெரிக்காவில் தோன்றி உலகேங்கும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி அமெரிக்க மையவாத உலகை ஆட்டம் காணச்செய்துள்ளது.

சீனா பிரேசில் இந்தியா ரஸ்சியா ஆகிய நாடுகள் உலக அதிகாரத்தில் பங்கு கேட்கிற நிலைக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சீனாவின் கரங்கள் ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தையை வளைக்கத்தொடங்கியுள்ளன.

அரசியல் அதிகாரப்போட்டியில் எதிரிகளாக இருக்கிற நாடுகள் பொருளாதார ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சந்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை எல்லா நாடுகளுக்கும் இருக்கின்றன.

2006ம் ஆண்டு ஜோர்ஜ் புஸ் இந்தியாவுக்கு வந்த போது இஸ்லாமியர் தீவிர வாதத்திற்கெதிரான போரும் கருத்துருவாக்கமும் முதன்மைப்பட்டிருந்தன. ஆனால் ஒபாமாவின் இந்தப்பயணம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களிலேயே முதன்மைக்கவனத்தை செலுத்துகிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.6 சத வீதத்திற்கு உயர்ந்துள்ளது.   அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது.  இது எதிர்பார்க்கப்பட்டதாயினும் மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத்திரும்பியமைக்கான முக்கியமான காராணங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதார நிலமையாகும். அதில் இருந்து மீள்வதற்கு ஒபாமா கடுமையாக ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒபாமாவின் இந்தப்பயணம் சரிவடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது;ஆப்கானிஸ்தானில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது; சீனாவைச் சுற்றி ஒரு பொருளாதார அரசியல் வியூகத்தை அமைப்பது (இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான் என அந்த வளையம் அமைந்துள்ளது.)
என்பவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுபுறத்தில் இந்தியாவும் தனது பின்வரும் நலன்களைக் முதன்மைப்படுத்துகிறது.
மேலதிக அமெரிக்க முதலீடுகளை ஊக்குவித்தல்.  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒபாமாவின் திட்டத்தையிட்டு இந்திய வியாபாரிகள் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவை கவலை அடையச் செய்கிறது. அண்மையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் டொலர்களை இஸ்லாமியத்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கென  வழங்கி இருந்தது.

பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் பெற்றுக் கொள்ளும் நவீன ராணுவத்தொழில் நுட்பங்களும் தளபாடங்களும் எதிர்காலத்தில் தனக்கெதிராகத்திரும்பலாம் என இந்தியா அஞ்சுகிறது.
பெரும்பான்மையான இந்திய உயர்வர்க்கத்தினர் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதைவிடவும் இந்தியாவுடன் நெருங்கி வருவதை விரும்புகிறார்கள்.
அமெரிக்காவுக்கு இங்கு தலையிடியாக இருக்கும்  விடையம் என்னவெனில் அமெரிக்காவிடம் இருந்து அளவுக்கு மீறி உதவிகளைப் பெற்றுக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொண்டாலும் பாக்கிஸ்தான் மறுபுறத்தில் காஷ்மீரிலும், இந்தியாவினுள்ளும்  இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது. மேலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் உளவு நிறுவனங்கள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்தின் உயர் மட்டத்தில் தலிபான்களுக்கு ஆதரவு இருப்பதாகவும் கருதுகின்றன.
ஆனால் அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எதிர்க்க முனையுமாயின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவிகளைச் செய்யக்கூடும்.
 எனவே என்ன விலை கொடுத்தேனும் அது பாகிஸ்தானைத் தன்னருகே வைத்திருக்கவே விரும்புகிறது. எனவே இந்தப் பயணத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தங்களுக்கு இடையில் உள்ள கசப்பையும் முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி திரைமறைவில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவையும் தனது பொருளாதார நலன்களுக்காக நண்பனாகவே வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு அளிக்கப்படும் சம அந்தஸ்து தனக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்  எரிச்சலும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு வெளியே இன்னமும் வரவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறுவதற்கும் இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது.  ஆயினும் அமெரிக்கா இது தொடர்பாக சாதகமான சமிக்கைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை.
மறு புறத்தில் இந்தியா அமெரிக்காவுடன் கொள்ளும் நெருக்கம் சீனாவையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.
ஒபாமாவின் வருகை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கலக்கமூட்டுவதாக உள்ளது.  ஏனெனில் குறிப்பாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை முழுமையாகக் திறக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

ஒபாமா வின் வருகையை எதிர்த்து  யத்மல் மாவட்டத்தில் முக்கியமான எதிர்ப்புக் கூட்டமும் ஊர்வலமும் நடத்தப்படுகின்றன. விதர்பா பண்ணை விதவைகளின் சங்கம் இந்த எதிர்ப்பை ஒழுங்கு செய்துள்ளது. 1999 ம் ஆண்டில் இருந்து அமெரிக்க பருத்தி விதைகளின் இறக்குமதிகாரணமாகவும் அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்கள் காரணமாகவும் இந்திய பருத்தி உற்பத்தியாளர்கள் மிகக்கடுமையான நட்டங்களை  எதிர்கொண்டனர்.இதன் விளைவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். இந்த விவசாயிகளின் விதவைகள் ஒன்று திரண்டு “ஒபாமாவே திரும்பிப்போ” என்கிறார்கள். அவர்களின் ஒபாமாவினை சந்தித்து மனு ஒன்றைக்கையளிக்கும் கோரிக்கையும் இந்திய அதிகாரிகளால் நிராகரிகப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது.  சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி சிலபகுதிகளில்  அபரிமிதமாகவும் பலபகுதிகளில் பின்தங்கியதாகவும் இருக்கிறது. இந்தியாவின் அரச இயந்திரம் ஊழல் நிறைந்ததாகவும் வினைத்திறன் குறைந்ததாகவும் இருக்கிறது.

ஓலிம்பிக் போட்டிகளை சீனா நடாத்திய விதமும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடாத்திய விதமும் இரண்டு பிராந்திய வல்லரசுகளின் அரச, பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனைக் காட்டின.
நிர்மாண வேலைகளில் ஏற்பட்ட தாமதம், விளையாட்டுவீரர்களுக்கான சுத்தமான தங்குமிடங்களை அமைக்க முடியாது போனமை ,சரியாக இயங்காத உபகரணங்கள் என இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் அவமானப்பட்டிருந்தது.
சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா 10 வருடங்கள் பின்தங்கியதாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் சீரான பொருளாதார வளர்ச்சியும் அதன் பலம்பெற்று வரும் ஆசியபிராந்திய ராணுவ வலையமைப்பும் அமெரிக்காவை உலக அரசியலில் தனது முதன்மையான பாத்திரம் குறித்து கவலைப்பட வைத்துள்ளது.

2005 ம் ஆண்டில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு தொடர்பான விடையங்களில் மேலும் நெருங்கி வந்துள்ளன.
2009 ம் ஆண்டு மலபாரில் நடந்த யப்பானும் பங்கு கொண்ட இராணுவ ஒத்திகையைக் இங்கு உதாரணமாகக் கூறலாம்.
 கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா இராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற வியாபார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 30 பில்லியன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் தனது இராணுவத்தளபாடங்களுக்கு ரஸ்சியாவை நம்பியிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.

இக்கட்டுரை எழுதப்படும் போது அமெரிக்கா போயிங் விமானங்கள் இலத்திரனியல் இயந்திரங்கள்  போன்றவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பான இந்திய‐அமெரிக்க 10 பில்லியன் டொலர் வியாபார ஒப்பந்ததைத் செய்துள்ளது. இது அமெரிக்காவில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றால் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் என்ன நன்மைகளை அடையுமென எவர்க்கும் தெரியாது.

வளர்ச்சி அடைந்து வரும் ஆசியப்பொருளாதாரங்களைத்  தனக்கு கீழ்நிலையில் வைத்து பார்க்காமல் சமதையாக பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பதைப்பயன்படுத்தி சரியான பொருளாதர ஒப்பந்தங்களை செய்ய முடியும் என ஆசிய பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்திய ஆளும் வர்க்கம் தனதும் தான் சார்ந்த முதலாளிகளினதும் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் தன்மையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 மில்லியன் புதிய மத்திய வர்க்கத்தை உருவாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.

அதே நேரத்தில் பில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்ச்சென்றுள்ளனர்

இவர்களுக்கு அமெரிக்காவின் முதலாவது கறுப்பு சனாதிபதி தான் பார்வையிடச் செல்லுமிடங்களில் தேங்காய்களை பறிக்கவும் குரங்குகளைப் பிடிக்கவுமான தற்காலிக வேலையே வழங்கியுள்ளார்.


GTN ற்காக தேவன்
 
(1) அபிப்பிராயங்கள்
 
06-12-2010, 17:03
 - Posted by Anonymous
உண்மை. சீனா இந்தியாவை பல வழிகளில் முந்தி சென்று கொண்டிருக்கு...""""இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது. சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன."""" .... நல்ல ஆய்வும் - செய்தியும்...

8 ஜனவரி, 2011

நோபல் பரிசும் அதன் அரசியலும் ..




1935 ம் ஆண்டிற்குப் பின்பு முதன்முறையாக நோபல்பரிசுப்பதக்கம் ஒரு வெற்றுக் கதிரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட சீன எதிர்புரட்சியாளர் லியூ ஷிஆபோ [Liu Xiaobo] சீனாவில் 2009 இல் இருந்து 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.  அவரது மனைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரது சகோதரர்கள் சீனாவை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  எனவே பதக்கம் வெற்றுக்கதிரைக்கு.

1935ம் ஆண்டு ஜேர்மனிய அஹிம்சாவாதியான கார்ல் வான் ஒஸ்ஸிற்ஸி[ Karl von Osisietzky] தனது பரிசை பெற்றுக் கொள்ள சமூகமளித்திருக்கவில்லை.
இந்த முறை சமாதானத்திற்கான நோபல் பரிசை லியூ ஷிஆபோ வுக்கு வழங்கியமை சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதுமட்டுமல்ல நோபல்பரிசளிப்புத் தினத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தனது ஆதரவு நாடுகளுக்கு சீனா அழுத்தங்களையும் வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அழுத்தம் இராசதந்திர மட்டத்திலும் பொருளாதார உறவுகள் மட்டத்திலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீழ்வரும் 15 நாடுகள் நோபல்பரிசு வழங்கும் வைபவத்தைத் தவிர்த்திருந்தன.
பர்மா, வடகொரியா, கியூபா, ரஸ்சியா, கசகஸ்தான், துனீசியா, சவுதிஅரேபியா, பாகிஸ்தான், இராக், இரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், வெனிசுவெலா, எகிப்து, சூடான், மற்றும் மொரொக்கோ.
பரிசளிப்பில் கலந்து கொள்ளாத சில நாடுகள் என்ன காரணத்திற்காக  அவற்றில் கலந்து கொள்ளவிலை என்பதை அறிவது சுவாரசியமானது.
ரஸ்சியா சீனாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டது எனக் கூற முடியாத போதும்  சீனாவுடனான வளர்ந்து வரும் வியாபார உறவுகளைப் பழுதாக்க  விரும்பியிருக்கவில்லை எனக்கருதலாம்.
சீனாவுக்கு தேவைப்படும் நிலவாயு முழுவதையும் வழங்குவதற்கு ரஸ்சியா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.  வரும் ஆண்டில் ரஸ்சியா சீனாவின் தியன்வான் மாகாணத்தில் இரண்டு அணுஉலைகளைக் கட்டுவதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதுமட்டுமல்ல சீனாவும் ரஸ்சியாவும் தமது வியாபார நடவடிக்கைகளைத் தனியே ரூபிளிலும் யென்னிலும் மட்டுமே செய்வதென்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. இதன்மூலம் டொலர் மற்றும் யூரோ நாணயங்களில் ஏற்படும் தளம்பல்களில் இருந்து விடுபடவும் முடிவு செய்துள்ளன.
ஜரோப்பிய நாடான செர்பியா முதலில் இந்தப்பரிசளிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லையெனத் தெரிவித்திருந்தாலும் ஜரோப்பிய ஒன்றியத்தின்   கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தனது அரசப்பிரதிநிதியைப் பரிசளிப்பு வைபவத்திற்கு  அனுப்பச் சம்மதித்திருந்தது.
2008 ம் ஆண்டு கொசவோ சேர்பியாவில் இருந்து பிரிந்த போது சீனா அதனை எதிர்த்து சேர்பியாவை ஆதரித்திருந்தது.  கொசவோவின் விடுதலைக்காக பாடுபட்ட  பின்லாந்து பிரதமர் 2008 ம் ஆண்டு அதற்கான நோபல்பரிசைப் பெற்றபோது அந்தப் பரிசளிப்புவைபவத்தையும் சீனா சேர்பியாவுக்காகப் புறக்கணித்திருந்தது. ஆயினும் செர்பியா ஜரோப்பி ஒன்றியத்துள் நுளைவதற்கு முயற்சித்து வருவதனால் தற்போது கடைசி நேரத்தில் சீனாவைக் கைவிட்டுள்ளது.

ஈராக்கும் சீனாவுக்காக இந்தப்பரிசளிப்பைப் புறக்கணித்திருக்கிறது.  ஈராக் சீனாவுடன் மசகு எண்ணை வர்த்தகத்தில் கவர்ச்சிகரமான வருமானத்தைத் தரக்கூடிய 5 ஒப்பந்தங்களை கைசாத்திட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈராக் இழக்க விரும்பவில்லை. இங்கே முரணணி என்னவென்றால் ஈராக் யுத்தத்தின் விளைவின் பலாபலன்களை அதில் சம்பந்தப்படாத சீனாவும் அனுபவிப்பதுதான்.

மோரொக்கோவும் தனது நாட்டில் மேற்கு சஹாராவின் விடுதலைக்காகப் போராடி வரும் பெண்மணியான  அமினாது ஹைதர் [Aminathu Haidar]  எதிர்காலத்தில் நோபல்பரிசுக்குச் சிபார்சு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இந்தப் பரிசளிப்பை பகிஸ்கரித்துள்ளது.  அடிப்படையில் மொரொக்கோ எதிர்புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவதை கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறது.

வியட்நாமும் நோபல்பரிசு வழங்கப்படும் முறைமையை இதுவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.  வியட்நாமின் பழைய தலைமுறை அரசியல்வாதிகள் சீனசார்பு நிலையை கொண்டிருந்தாலும் இம்தலைமுறை மேற்குலகசார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.  இதனால் வியட்நாம் முன்பு போல சீனாவின் உற்ற நண்பன் இல்லை என்ற போதும் அதன் நோபல் பரிசின் மீதான நாட்டமின்மை பிரசித்தமானது . 1973ம் ஆண்டு வியட்நாமின் கம்யூனிஸக் கட்சியின் தலைவர் லி டுக் தோ வும் [ Li Duc Tho] அமெரிக்கரான ஹென்றி கிசிங்கரும் [Hentry kissinger] ஒன்றாக நோபல்பரிசுக்கு  அறிவிக்கப்பட்ட போது அதனைக் காரணங்கள் எதுவும் கூறாமல் வியட்நாம் நிராகரித்திருந்தது.

சீனாவின் கோபம் ஒரு புறம் இருக்க நோபல் பரிசுக் குழுவின் தெரிவுகள் குறித்துக் கவனிக்கும் போது அதன் மேற்குலகசார்பு அரசியலை விமர்சிக்காமல் விடமுடியாது.  அமெரிக்க ஜரோப்பிய வகையிலான முதலாளித்துவ நலன்களைப் பேணும் வகையிலேயே பரிசு பெறுவோர் தெரிவுசெய்யப்படுகின்றார்கள்.

எதிர்ப்புரட்சியாளர்களுக்குப் பரிசு வழங்கும் நோபல் பரிசுக்குழுவின் முடிவு வியப்பைத் தருவதல்ல. ஆனால் அமெரிக்க மற்றும் ஜரோப்பாவில் உள்ள எதிர்ப்பாளர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.  உதாரணமாக சனநாயக வாதியும் மனித உரிமைவாதியுமான நோம் சோம்ஸ்கி ஒருபோதும் நோபல்பரிசுக் குழுவினரின் கண்களில் படப்போவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் எதிர்ப்புரட்சியாளர்கள் தாராளவாத முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறை முகத்தை தோலுரித்துக்காட்டுவதால் அவர்கள் நோபல்பரிசுக்கு உகந்தவர்களாகத் தென்படுவதில்லை. பதிலாக ஆப்கானிஸ்தானில் இன்னமும் யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஓபாமாவும் உலகம் வெப்பமடைதலையும் உலகம் தழுவிய சூழலியல் பிரச்சினைகளையும் வியாபாரமாக்கி அதிகம் பணம் சம்பாதித்த அல்கோரும் நோபல் பரிசுக்குழுவின் கண்களுக்கு தென்பட்டதொன்றும் உலக அதிசயமில்லை. 
அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட பின்பும் யுத்தங்கள் கூர்மைப்பட்ட வரலாற்றையே கடந்த காலங்களில் காண்கிறோம்
1973ம் ஆண்டில் அமெரிக்கரான ஹென்றி கிசின்ஹர், 1994இல் இஸ்ரேலியரான சிமோன் பெரஸ்சும் ரொபினும் 2000ம் ஆண்டில் தென்கொரிய பிரதமர் கிம் டே-யுங் உம்  [Kim Dae-jung], 2009 இல் ஓபாமாவும் நோபல்பரிசைப் பெற்றிருந்தனர்.  ஆனால் பலஸ்தீனத்திலும் கொரிய வளைகுடாவிலும் ஆப்கானிஸ்தானிலும்  சமாதானமும் அமைதியும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குப் போய்விட்டன.
நோபல்பரிசுக்கான செல்வத்தை விட்டுச் சென்ற அல்பிரட் நோபல் வெடிமருந்தையும் ஏவுகணை செலுத்தும்  தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்தவர்.  இதனாலேயே இவர் அளவுக்கதிகமான செல்வத்தையும் சம்பாதித்தார். இவரது கண்டுபிடிப்பின் விளைவால் மரணத்தின் வியாபாரி எனவும் அழைக்கப்பட்டவர்.
அவரது பணத்தை கைகளில் இரத்தம் படிந்தவர்கள் அமைதி அடைவதற்கு வழங்காமல் வேறு யாருக்கு கொடுக்க முடியும் என நோபல் பரிசுக்குழு  அவ்வப்போது நினைக்கிறதோ  என்னவோ!!!
அடிப்படையில் லியூ ஷிஆபோ சீனாவினுள் முதலாளித்துவ சனநாயக மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிற ஒருவராவார். இதனாலேயே மேற்குலகம் அவரை விடுதலை செய்யக்கோருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் இவரைப்பற்றி பெருமளவுக்கு அறிந்திருக்கவில்லை. இவர் பற்றியும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை பற்றியும் சீனஊடகங்கள் கடுமையான தணிக்கையைக் கடைப்பிடித்துள்ளன.
உண்மையிலும் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் இடையில் உள்ள முரண்பாடு அதிகாரத்துவ முதலாளித்துவத்திற்கும் தாரளவாத முதலாளித்துவத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடாகும்.
உலகம் தழுவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நோபல்பரிசு தொடர்பாக எழுந்துள்ள கோபதாபங்கள் காலப்போக்கில் ஒரு மூலையில் போடப்பட்டுவிடும்  என உறுதியாக நம்பலாம்.
எவ்வாறெனினும் லியூ சீன அரசிற்க்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருப்பது எந்த சனநாயகத்திற்கும் பொருந்தாததாகும்.
தியனமென் சதுக்கப் படுகொலைகளில் தொடங்கி இன்றுவரையும் சீனாவின் பிரமாண்டமான அதிகாரச்சுவருக்கெதிராக அடிப்படை மனித உரிமைகளுக்காக லியூ போராடிவருகிறார்
1997 ம் ஆண்டு சீன அரசினால்  சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்ட போது அவர் பின் வரும் கவிதையை தனது மனைவிக்கு சமர்ப்பித்து (For Xia)எழுதியிருந்தார்.

எனது அகக்கண்களால் அளவிடமுடியாதபடி
பிரபஞ்சம் அகன்று வெளிறிப்போயுள்ளது.
எனக்கு மழையின் ஒரு துளியைத்தா
இறுகிக் கிடக்கும் இச்சீமெந்துத்தரையைப் பளபளப்பாக்குவதற்கு..
ஒளியின் ஒரு கதிரைத்தா
மின்னல் எதை விரும்புகிறது எனக்காட்டுவதற்கு..
ஒரு சொல்லாவது பேசு
பிறகு இக்கதவைத்திறந்துவிடு
இந்த இரவு தனது வீட்டிற்குப் போவதற்கு ..

* நன்றி- Daan Bronkhorst

ஆசியாவில் சனநாயகம் என்பது அதிலும் குறிப்பாக இந்தியா இலங்கை பாக்கிஸ்தான்  போன்ற நாடுகளில் வெட்கப்பட வேண்டிய கேலிக்கூத்தாகும்.
இந்தியாவில் அருந்ததிராய், தமிழ்நாட்டில் சீமான் இலங்கையில் லசந்த, திசைநாயகம் இன்னும் ஏராளமான தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் என யாவரும் தங்களது கருத்துக்களைப் பேசியதற்காக அல்லது எழுதியதற்காக மரணிக்க அல்லது அளவிட முடியாத இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
அடக்குமுறைகளுக்கெதிராகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் பொறுப்புணர்வுள்ள சனநாயகத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கிற எந்தச் செயற்பாட்டாளர்களும்  நோபல்பரிசுக்காகக் காத்திருப்பதில்லை.
லியூ ஷிஆபோ வுக்கு நோபல் பரிசை விடவும் முக்கியமானது அவரைப் பேசவும் எழுதவும் வாழவும் விடுவதுதான்.
1.3 மில்லியாட் சனத்தொகையையும் 300க்கும் மேற்பட்ட வகையான மொழிகளையும் இனங்களையும் கொண்ட சீனா, அதிகாரத்தைத்தவிர வேறேந்த வழியிலும் சீனாவை ஒருமைப்பட்ட நாடா  வைத்திருக்க முடியுமென நம்பவில்லை. தியனமென் சதுக்கப்படுகொலைகளே அதற்குச்சாட்சி.
இன்றைக்கு சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கக்காய்சலுக்குள் ஊடாடிக் குளிர் காயும் சிங்கள பௌத்த அரசு நிகழ்த்திய  முள்ளிவாய்கால் படுகொலைகளும் வெறித்தனமான அதிகாரத்திற்குச்சாட்சி.
காலத்தை பின்னோட்டிப் பார்க்க முடிந்தால் யுத்த நிறுத்தத்தின் பிற்பாடு பிரபாகரனும் மகிந்தவும் கைகளை குலுக்கிக் கொண்டிந்தால் வெற்றிடமாயிருந்த அந்தக்கதிரையில் சிலவேளை மூன்று பேர் இருந்திருப்பர்.
பிரபாகரன் மஹிந்த எரிக்சொலகைம்.
சீனாவுக்கும் இவ்வளவு கோபம் வந்திருக்காது.

தேவ அபிரா
12-10-2010

நன்றி:
விக்கி பீடியா
த பெர்ஸ்
இணையக்கட்டுரைகள்.


17 டிசம்பர், 2010


நாடக உலகின் தாய்

அரங்கை ஒரு பலமிக்க பல தள வழிமுறையாக (means)  விசையுடன் பயன்படுத்திய குழந்தை அவர்கள் தமது சுயபடிமத்தை மௌனமாகவே வைத்துக் கொண்டார்.
சபா ஜெயராசா

குழந்தை .சண்முகலிங்கம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவரை நாடக உலகின் தாய் என பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார்.
1989 ம் ஆண்டில் சண்முகலிங்கம் சேர்ருடன்  எனக்கு அறிமுகம் கிடைத்தது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைகள் முடிந்த பிறகு கலை இலக்கிய நாட்டம் காரணமாக நாட அரங்கக் கல்லூரிக்குள் இணைந்தேன். இது ஜெயசங்கர் மூலமாகவே நிகழ்ந்ததாக நினைவு.
அந்தக்காலத்தில் ஜெயசங்கர் அகிலன் சத்தியன் நந்தா இளங்கோ(இன்னும் பலரின் பெயர்கள் மறந்து விட்டன) என் நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம்.

இந்தக் குழுவில் இருந்த பலர் நாடகமும் அரங்கியலை  கல்விப்பொதுத்தராதர உயர்தரச் சோதனைக்கு ஒரு பாடமாக  சண்முகலிங்கம் சேரிடம் கற்றுக் கொண்டிருந்தனர்.
அதுநூட்டுமல்ல நாடக அரங்கக் கல்லூரியின் நாடகத்தயாரிப்புகள் களப்பயிற்சிகள் போன்றவற்றிலும் பங்கு கொண்டிருந்தனர். குறிப்பாக பாடசாலை நாடகங்கள் சிறுவர் நாடகங்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில்/நெறியாள்கை செய்வதில் சண்முகலிங்கம் சேரின் வழிகாட்டலுடன் இந்தக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர் நாடகங்கள் தொடர்பாக- குறிப்பாக குழந்தைகளின் உளவியல் தொடர்பாக குழந்தை சேர் கொண்டிருந்த பிரக்ஞை மிக முக்கியமானது.
சனநாயகப்பண்புகள் குறைந்த எங்கள் தமிழ் சமூகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளினதும் சிறுவர்களினதும் ஆளுமை வெளிப்பாட்டுக்கான ஒரு வெளியை சிந்தித்து அதை நாடகத்தினூடாக வழங்க முடியும் என் நிரூபித்தவர் குழந்தை . சண்முகலிங்கம்.
ஈழத்து நாடக வரலாற்றில் நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கம் முக்கியமானதொரு திருப்புமுனையாகும்.
நாடக அரங்கக் கல்லூரி நடாத்திய நாடாத்துகிற களப்பயிற்சிகள் முக்கியமானவை.
நான் 1989க்கும் 1993க்கும் இடையில் நடந்த அனேகமான பயில் நெறிகளிலும் பங்கு கொண்டிருந்தேன்.
இவை என் ஆளுமையிலும்  அனுபவங்களிலும் பெருமளவு மாற்றங்களை கொண்டு வந்தன.
இன்று உலகம் முழுவதும் சிதறிச்சென்று  வாழ்கிற இந்தக்களப்பயிற்சிகளில் பங்கு கொண்ட அனைத்து நாடக மாணவர்களும் ஆர்வலர்களும் இதனை ஒத்துக்கொள்வார்கள்.
நாடகம் என்றால் வெறுமனே எழுத்துரு- ஒத்திகைபார்த்தல்-அளிக்கை என்ற ஒற்றைப்பரிமாணத்தை  மாற்றியமைத்தன இந்தக்களப்பயிற்சிகள்.
ஒரு நாடகத்தயாரிப்புக்குள் வருகிற அனைத்து விடையங்களையும் ஒருங்கிணைத்து  ஒரு பண்பாடக தானியங்கி  ஒழுக்க மாக மாற்றிவிடுகிற வேலையை இந்த களப்பயிற்சிகள் செய்துவிடுகின்றன.
நிதானமாக மனிதஉணர்வுகள் பற்றிய பொறுப்புணர்வுடன் குறித்த களப்பயிற்சியில் பங்குகொள்கிற சம்பந்தப்படுகிற அனைவரையும் நான் மேலே குறிப்பிட்ட தானியங்கிப் பொறிமுறைக்குள் கொண்டுவரும் அழகையும் சண்முகலிங்கம் சேரின் ஆளுமையையும் அதனை அனுபவித்தவர்கள் அனைவரும் ஒத்துக்கொள்வர்.

ஒரே நடிகன் ஒரே நெறியாளன் ஒரே எழுத்துருவாக்கன் கீழ் வரும் மூன்று  முக்கிய மான நாடகங்களில் மூன்று வேறு திசைகளுக்குள்  விரிந்து சென்றதைக் காணமுடிந்தது.

சிதம்பரநாதன்  சண்முகலிங்கம் சேர் கூட்டுழைப்பாக வந்த  மண்சுமந்த மேனியரின்  எழுத்துரு சண்முகலிங்கம் சேரின் முக்கியமானதொரு எழுத்துரு. பக்தி இலக்கியம் ,மண்வாசனை,
சமூக அவலம் ,விடுதலை வேட்கை என்பவற்றின் அற்புதமான கலவை  மண்சுமந்தமேனியர்.
யாழ் மாவட்டத்தின் பெருமளவான பார்வையாளர்களை சென்றடைந்த நாடகம் அது.
அன்னையிட்ட தீ யை வைத்திய காலாநிதி சிவயோகன் அவர்களின் தூண்டுதலாலும் துணையாலும் எழுதியதாக சண்முகலிங்கம் சேர் குறிப்பிடுவார்.
போரினால் உண்டான சமூக மற்றும் தனிமனித உளக்காயங்களுக்கு நாடகத்தை நோய்தீர்க்கும் நிவாரணியாக பயன்படுத்த இந்த நாடகம் முயல்கிறது
மற்றையது எந்தையும் தாயும். இது ஒரு நாற்சார் அரங்கம் படச்சட்ட மேடைக்குள் இயங்கிய இயங்கிவந்த நாடகத்தை நாற்சார் வீட்டுக்குள் கொண்டு சென்றது இந்த நாடகம். பார்வையாளனை நாடகத்தின் ஒரு பகுதியாகமாற்றியது. சண்முகலிங்கம் சேரின் அனேகமான நாடகங்கள்  (Narrative Theater ) எடுத்துரைக்கும் அரங்கங்களாகும். அனால் எந்தையும் தாயும் அதில் இருந்து மாறுபட்டு ஒருகதையை மையப்படுத்திய பாத்திர உருவாக்கத்தில் அதிகம் கவனம் செலுத்தியது.
இது ஒரு சிறு குறிப்பெனினும் வாழும் கலைஞனை  அவர் வாழும் காலத்திலேயே நினைவு கூர்வதும் கௌரவிப்பதும் முக்கியமானதல்லவா?
தேவ அபிரா.
15 nov 2010