
மறுகும் மனவெளியில் ஒரு கனவு வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ
உயிர் வெந்து வாடும் உடல் நின்று தேடும்
மனம் கொண்ட பின்னாலே வருகின்ற மாயம்
களி கொண்டு ஆடும் மொழி நின்று போகும்
இதழ் தின்ற பின்னாலே வருகின்ற மோகம்
மறுகும் மனவெளியில் ஒரு கனவு
வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ
கடல் தாண்டிப் போகும் கலம் என்று ஆனாய்
நீ சென்ற பின்னாலே நிலவில்லா மாடம்
விடைபெற்ற நாளும் விழி கொண்ட நீரும்
சுரம் நின்ற பின்னாலே அழுகின்ற கானம்
மறுகும் மனவெளியில் ஒரு கனவு
வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ
போர் தின்ற நாடு போய் எங்கு சேரும்
பேய் வந்த பின்னாலே வாழ்விங்கு சாபம்
வாழ் வென்று கூட வீ டொன்று வாடும்
சீர் வந்த பின்னாலே மூச்சொன்று சேரும்.
மறுகும் மனவெளியில் ஒரு கனவு
வருமோ
இருகனவு தழுவவொரு நிலவு வருமோ
தேவ அபிரா
22-06-2012
அருமை சார்.
பதிலளிநீக்கு