பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2007

இலையுதிர்காலம்

இலையுதிர் காலத்தின் குளிருக்கே நடுங்குகிறாய்...
உன்னையெது இங்கு கொண்டுவந்தது?
காற்றா... கடலா...கனவா
*காட்டமான மதுவின் வெறியா*... கானல் நீரா...?
போடா முட்டாள்!
நெடிதுயர்ந்த மரங்கள்
இலைகளை இழக்கையில் பேசிக்கொண்டவைகளை
காற்றோ அள்ளிச்செல்கிறது.
நீயோ அவற்றையெட்டிப்பிடித்து
கவிதையாக்கலாமென்று
ஓடிக்கொண்டிருக்கிறாய்!

மார்கழி 2000
*-* கலீல் கிப்ரானின் வரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக