பின்பற்றுபவர்கள்

6 டிசம்பர், 2007

நிறைவேறாத காதல்

தனிமை
துயர்தரும்
எனத்தெரிந்திருந்தும்
நீரற்ற ஆற்றின் கரையில் நான்.
வானம் சிவப்பாய் எரிந்தது
மந்தைகளும் இடையனும் மறைந்தனர்.
ஒரு தொலைவுக்கு வெற்று வீதி...
ஒரு நொடியில் இருள்...
எல்லாச் சமாதானங்களின் பின்பும்
பாறை வெடிப்பொன்றினூடு சீறிப்பாயும்
ஊற்று நீர் போல உன் நினைவு.
இக்காதலும் இப்புனிதமும்
இப்படியே வாழட்டும்.

நீயோ நானோ
ஒருவரை ஒருவர் நோக்கி வராதிருப்போம்.
மெளன அழுகை
ஆற்றை நிறைக்கட்டும்.

பங்குனி - 1991

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக