பின்பற்றுபவர்கள்

12 ஏப்ரல், 2008

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் சேர்ந்து நடந்தோம்

நாங்கள் இருவரும் ஒரே நோக்கத்திற்காகவே நடந்தோம்

நீ அறிவின் வலிவுடனும்

நான் உணர்வின்தாளத்துடனும்

ஆயினும் நீயும் நானும் ஒரே இலயத்தில் இல்லை

எனேனில் உன் வழி எனதல்ல

நாங்கள் ஒரே பாடலையே படித்தோம்

ஒன்றுடனொன்று பொருந்தாத பாடுமுறையென்றபோதும்

மீண்டும் மீண்டும் முயற்சித்தோம்

எமது எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிந்தபோது

நான் உனது முறையிலும் பாட முனைந்தேன்

அக்கணத்தில் அது நானல்ல என்றுணர்ந்தபோது அதிர்ச்சியுற்றேன்.

நானேதான் நானாகவிருக்கவும் எனது பாடலைப்பாடவும்.

எனது பாடல் உன்னைச்சேரவிலை-அச்சமுற்றேன்

ஒரே விளையாட்டை விளையாடிய இருவரும் மகிழ்ச்சியாகவுமில்லை.

உனது ஆட்டவிதிகள் என்னுடையதை விடவும் வெறுபட்டிருந்தன.

இவ்வாறுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம்.

ஒவ்வொருவரும் தனக்காக; தனியாக நாளையைநோக்கிய பாதையில்…

உண்மையிலும் எந்தவிடத்தை நோக்கியுமல்ல..

மரிகெ த ஜொங்.

நெதர்லாந்து

மொழிபெயர்ப்பு: சாகித்தியன்
நன்றி:www.globaltamilnews.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக