பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் பாதுகாப்புக்கான புதிய மூலோபாயத்தில் ஆசியா குவிமையப் படுத்தப்பட்டுள்ளது.
 ஆசியப்பிராந்தியத்தில் உருவாகும் புதிய அதிகாரக் கூட்டணிகளை விளங்குவதற்கு கிழ்வரும் மொழிபெயர்ப்புக் கட்டுரை உதவிசெய்யும். இந்த அதிகாரக் கூட்டணிகளுக்கிடையிலான மோதலையும் இவற்றின் இயங்கியலையும் உன்னிப்பாக அவதானித்து விளங்குவது தமிழர்களின் அரசியற்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

US New Defense Strategy focuses Asia: Nations tied to China need re-thinking
Daya Gamage – Asian Tribune Foreign News Desk
Washington, DC. 07 January (Asiantribune.com)

ஆசியா மீது தனது முதன்மையானதும் முழுமையானதுமான கவனத்தைத் திருப்பியிருக்கும் அமெரிக்கா சீனாவை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடாக இனம் கண்டுள்ள அதேவேளை தனது மூலோபாயத்தில் இந்தியாவுடனான தனது நீண்ட கால உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் சனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இணைந்து வெளியிட்ட அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை அவதானிக்கும் போது நீண்ட காலப் போக்கில்  அதன் வளர்ச்சியானது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடையங்களில் பல்வேறு வகைகளில் தாக்கம் செலுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது."
சீனாவை தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக் கொண்டு ஆசியாவை முதன்மைப்படுத்தி பென்ரகன்வகுத்துக் கொண்டுள்ள புதிய பாதுகாப்புக்கான மூலோபாயத்தை  வெளிப்படுத்தும், பென்ரகனுக்கு அரிதான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஒபாமா அவர்களால் வெளியிடப்பட்ட   ஆவணத்தில்   கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்"
"அமெரிக்காவின் உலகத் தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ளல்: 21ம் நூற்றாண்டில் பாதுகாப்பு திட்டங்களில் முன்னுரிமை பெறுபவை" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் நீண்ட காலப் போக்கில் சீனாவை தனது பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா இனம் கண்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும் என அந்த ஆவணம் மேலும் தெரிவிக்கிறது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி வெளிப்படுத்திய பாதுகாப்புக்கான மூலோபாயத்தில் ஆசியாவில் அமெரிக்க துருப்புக்களின் வலிமையான பிரசன்னத்தையும் வலியுறுத்தி இருந்தார்.

பழுதடைந்து வரும் அமெரிக்காவுடனான உறவுகள் காரணமாகப் பாகிஸ்தான் சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதுடன் சீனாவுடன் தந்திரோபாய ரீதியான உறவுகளை ஏற்படுத்த முனைந்தும் வருகிறது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கான 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கடந்த மாதம் நிறுத்திவிட்டிருந்ததையும் இங்கு நினைவு கூரலாம்.
பாகிஸ்தானின் தலைமை இராணுவத் தளபதி  சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்காகத் தற்போது சீனா சென்றுள்ளார்.
இன்னுமொரு தென்கிழக்காசிய நாடான இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு உதவியதன் காரணமாக சீனாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது.  இந்த விடையத்தில் மேற்குலகும் அமெரிக்காவும் இலங்கைக்கு உதவுவதில் பின்நின்றதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கடந்த 2009 ஆண்டு மே மாதத்தில் இலங்கை சீனாவினதும் பாகிஸ்தானினதும் உதவியுடன் 26 வருடங்களின் பின்பு விடுதலைப் புலிகளை அழித்தது.

சீனாவுக்கு மிக நெருக்கமாக வந்ததில் இருந்து இலங்கை சீனாவின் உதவியுடன்  பாரிய கட்டுமானத்திட்டங்களைச் செய்துள்ளது. குறிப்பாகத் தென் ஆசியக் கடற்பிராந்தியத்தின் முக்கியமான கடல் வழியில் அமைந்திருக்கும் அம்பாந்தோடடைத் துறைமுகத்தில் ஆழ்கடல் துறைமுகமொன்றை அமைத்ததன் மூலம் சீனா அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
ஆசியா தொடர்பான அமெரிக்கக் கொள்கைகள் மாற்றமடைந்துள்ளதால் சீனாவுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணிவரும் நாடுகள் சீனாவுடனான தமது உறவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தியும் அந்த ஆவணத்தில் வளங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2009 இல் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளுக்கான அமெரிக்க செனற்சபையின் குழு அமெரிக்க இராசாங்கத்திணைக்களத்தை இலங்கையை சீனாவை நோக்கி தள்ள வேண்டாம் என எச்சரித்திருந்தது.  ஆசியாவில் பேணப்படவேண்டிய ஒட்டுமொத்தமான அமெரிக்க நலன்களுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை முக்கியமானது என அக்குழு மேலும் எச்சரித்திருந்தது. எட்டுப் பக்கங்களைக் கொண்ட  அந்த ஆவணத்தில் உள்ள  முக்கியமான ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொடங்கி கிழக்கு ஆசியா மற்றும் இந்து சமூத்திரப் பிராந்தியத்தினூடாகத் தென் ஆசியா வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு வளைவினுள் நிகழும் விடையங்களுடன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ நலன்கள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.  இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கான சந்தர்ப்பங்களும்  சவால்களும் ஒன்றாக இணைந்து கிடக்கின்றன..
அமெரிக்க இராணுவம் உலகத்தின் பாதுகாப்புக்காக பங்களித்துக் கொண்டிருக்கும் அதே நேரம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தினை மீளச் சமநிலைப்படுத்தும் அவசியத்தை உணர்ந்துள்ளோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் எமது ஆசிய நண்பர்கள் மற்றும் முக்கிய பங்காளிகளுடனான உறவு முக்கியமானதாகும். அதுமட்டுமன்றி எற்கனவே உள்ள எமது கூட்டணிகளையும் நண்பர்களையும் வலுப்படுத்தவும் செய்வோம் என்னெனில் இது ஆசிய பசுபிக் பாதுகாப்புக்கான உயிரோட்டமான அடித்தளத்தைத் தரும்.
மேலும் நாங்கள் எங்களது கூட்டுறவு வலைஅமைப்பை ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் புதிதாக மேலெழுந்துவரும் நண்பர்களுக்கும் விஸ்தரிக்க விரும்புகிறோம்.  இதன் மூலம் எங்களுக்கும் அவர்களுக்குமான பொதுவான நலன்களை பேணும் வல்லமையையும் எங்கள் அனைவரினதும் கொள்ளளவையும் அதிகரிக்க முடியும். அதுமட்டுமல்ல அமெரிக்கா தனது தொலைநோக்குக் கொண்ட மூலோபாயத்தில் இந்தியாவைத் தனது நீண்ட கால நண்பனாக வைத்திருப்பதற்கு முக்கியமளித்து செயற்பட்டுவருகிறது.  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களின் நங்கூரமாக  இந்தியா விளங்குமென்பதால் அதன் வல்லமைக்கு அமெரிக்கா உதவி அளிக்கும்.மேலும் இந்துசமுத்திரத்தின் கடலோரங்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நாடாகவும் இந்தியா விளங்கும்
அமைதியைப் பேணுவதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் தடங்கலற்ற வர்த்தகம் என்பவற்றை இந்தப் பிராந்தியத்தில் பேணுவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெல்வாக்கைப் பேணுவதற்கும் அடிப்படையானதாக அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தையும் கொள்ளவையும் இந்தப்பிராந்தியத்தில் சமநிலையுடன் பேணுவது தேவையாக இருக்கிறது.  நீண்ட காலப் போக்கில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சி அமெரிக்காவுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் மீது பல்வேறு விதமான தாக்கங்களை உண்டுபண்ணக் கூடியதாக அமைகிறது. கிழக்கு ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என நாங்கள் இருவரும்(அமெரிக்காவும் சீனாவும்) வலிமையாக விரும்புகிறோம். அத்துடன் கூட்டுறவு அடிப்படையிலான பரஸ்பர உறவை உருவாக்குவதற்கும் விருப்பத்துடன் இருக்கிறோம்.  ஆயினும் சீனாவின் இராணுவ வலிமையின் வளர்ச்சியானது அந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற இராணுவ முரண்பாடுகளை உரசல்களை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக இருக்கக்கூடாது.  சீனா தனது இராணுவக் கொள்கை வகுப்பில் இந்த உரசல்களை தவிர்க்கும் மூலோபாயத்தையும் கூடவே கொண்டிருக்க வேண்டும்.
பிராந்தியங்களுக்குள் தங்குதடையின்றிப் பிரவேசிக்கவும் அதேவேளை சர்வதேசச் சட்டங்களை மதித்துக்கொண்டு பிரதேச இறையாண்மைக்கு குந்தகம் செய்யாதவாறு செயற்படவும் எங்களுக்குள்ள சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல முதலீடுகளையும் நாங்கள் செய்வோம்
எமது பங்காளிகளுடனும் நண்பர்களுடனும் மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்வதன் மூலம் நாங்கள் தெளிவான விதிகளுக்கு உட்பட்ட ஒரு உலக ஓழுங்கை உண்டாக்குவோம்.  இந்த ஒழுங்கு புதிதாக வரும் அதிகாரசக்திகள் அமைதியான முறையில் மேற்கிளம்பும்  அதேவேளை பிராந்தியங்களின் ஸ்திரத்தன்மை பேணப்படுவதையும் உறுதி செய்யும்.  இதன் மூலம் பொருளாதாரம் பன்முகப்படுவதுடன் பாதுகாப்பு தொடர்பான திட்டவட்டமான  பரஸ்பர ஒத்துழைப்பும் ஏற்படுத்தப்படும்.
சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுதல்
நவீன இராணுவம் ஒன்று சைபர் வெளியிலும் விண்வெளியிலும் பாதுகாப்பான உள்ளிடலையும் தங்கு தடையற்ற அனுமதியையும்  கொண்டிருக்க வேண்டியதுடன் நம்பகத்தன்மையான தகவல்களையும் தகவற்பரிமாற்ற வலையமைப்பையும் கொண்டிருக்க வேண்டும்.  இல்லாவிடின் நவீன இராணுவத்தினால் வினைத்திறனுடன் செயற்படமுடியாது. இன்றைய விண்வெளித் திட்டம் மற்றும் அதனை பேணும் உள்நாட்டு மற்றும் சர்வ தேசக் கட்டமைப்புக்கள் பல்வேறு விதமான பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  இந்தத் திட்டங்களை உடைத்தல் இடையீறு செய்தல் அல்லது அழித்தல் போன்ற பயமுறுத்தல்களுக்குச் சாத்தியமுள்ளது.  எனவே அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களம் தனது உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து சைபர் வெளியையும் விண்வெளியையும் அதன் வலை அமைப்புக்களையும் பாதுகாப்பதற்கான அதி நவீனமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு முதலீடு செய்யும்.

சைபர் வெளியிலும் விண்வெளியிலும் வினைத்திறனுடன் தொழிற்படுவது என்று கூறுவதன் மூலம் அமெரிக்கா உலகின் ஏனைய பகுதிகளைப் போல ஆசியாவிலும் தனது ஆளில்லாத வேவு விமானங்களைப் பயன்படுத்தி இந்தப் பிராந்தியத்தைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்தப் போவதை அறிவிகிறது.

இதே வேளையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து, தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதுடன் தங்களுக்கிடையிலான இராணுவ உறவுகளைப் புதிய ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லப்போவதாக  கடந்த ஜனவரி 5 இல் பாகிஸ்தானின் இராணுவத்தளபதி கயானி (Ashfaq Parvez Kayani) சீனாவிற்கு விஜயம் செய்து சீன உயர்மட்ட இராணுவத் தளபதிகளைச் சந்தித்துப் பேசியதன் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.  இதனை சீன அரசால் நடத்தப்படும் சின்குவா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வியாங் குவாஸ்லீ(Liang Guanglie) சீனா பாகிஸ்தானுடனான மரபார்ந்த நட்புணர்வைப் பெறுமதியானதாகக் கணிக்கிறது என அவ் அறிக்கையில் கூறி இருந்தார்.  மேலும் சீனா தேசியப் பாதுகாப்பு என்ற தளத்தில் பாகிஸ்தானுடன் நடைமுறைச் சாத்தியமான அதேவேளை வினைத்திறன் மிக்க கூட்டுறவை வளர்க்க விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இரண்டு நாடுகளுக்கிடையிலும் நிலவும் இந்த எல்லாக்கால நிலையிலும்(எந்தச் சூழ்நிலையிலும்) நீடிக்கக் கூடிய பரஸ்பர உறவானது இரண்டு நாடுகளினதும் அடிப்படையான நலன்களுக்கு அவசியமானதும் தந்திரோபாய அடிப்படையிலான தெரிவுமாகும் எனச் சீனப் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். 
சீனா பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் பாகிஸ்தானுடன் இணைந்து பாதுகாக்கும் எனவும் இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தருந்தார்.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கயானி (Gen Ashfaq Parvez Kayani) தனது பங்குக்கு சீனாவுடனான உறவில் பாக்கிஸ்தான் பெரும் முக்கியத்துவத்தை இணைத்துக் கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கும்  பொதுவாக பெருமளவான நலன்கள் உள்ளன என்றும்  அவர் கூறியுள்ளார்.
இவற்றுக்கு முன்பதாக பாகிஸ்தானின் இராணுவத்தளபதி  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணைத் தலைவரான ஜெனரல் மா ஷீஒசியான்(Ma Xiaotian)அவர்களுடனும் பேச்சுவார்தைகளை நடாத்தி இருந்தார்.
இரண்டு நாடுகளும் தமக்கிடையில் இராணுவப்பாதுகாப்பு பயிற்சிகள் ஆட்புலப்பயிற்சிகள் புலமைப்பரிமாற்றங்கள் உபகரண உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு போன்ற விடையங்களிலும் மரபு வழியற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து செயற்படப்போவதை வெளிப்படுத்தியுள்ளன.

நன்றி: Asian Tribune
http://www.asiantribune.com/news/2012/01/06/us-new-defense-strategy-focuses-asia-nations-tied-china-need-re-thinking

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக