பின்பற்றுபவர்கள்

10 ஜனவரி, 2011

துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?

 
தமீழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலும் இப்போதுள்ளதைப்போலவே ஒற்றுமையின்மையும் சுயநலன்களும் இருந்தன.
துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?
 
 
 

இந்தக்கிழமை ஊடகங்களில் வந்த  கட்டுரைகளில் எனக்கு முக்கியமாகப்பட்ட இரண்டு கட்டுரைகள் பற்றியும் அவற்றில் மேலெழுந்து வந்த முக்கியமான விடையங்கள் பற்றியும் எனது எண்ணங்களைப்  பகிர விரும்புகிறேன்.
முதலாவது கட்டுரை  மொழிபெயர்பாக வந்த
வளரும் இலங்கையுள் தமிழர்களின் வாழ்க்கை நம்பிக்கையிழந்து தனித்திருக்கிறது” ‐  என்னும் கட்டுரையாகும்.
இரண்டாவது கட்டுரை
தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி முனையிலிருந்து பி(ப)றந்த அதிகாரங்கள்
என்னும் கட்டுரையாகும்.
முதலாவது ஒரு கனேடியப்பத்திரிக்கையாளளின் இலங்கை பற்றிய அறிக்கையிடலாகும். அதனைத் தெளிவுக்காக ஆங்கிலத்திலும் தேடி வாசித்தேன்.
இக்கட்டுரையில் அரச ஒடுக்குமுறை தெளிவாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதிகாரப்பகிர்வின்மை, இனச்சார்பான ஆட்சிமுறைமை, தமிழர்கள் இரண்டாம் பட்ச நிலையில் வைக்கப்பட்டுள்ளமை, சிங்களக்குடியேற்றம், பத்திரிகை சுதந்திரமின்மை எனப் பலவற்றை அவர் கூறிச் செல்கிறார். அதே நேரத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.
 
இனி அதே கட்டுரையில் வந்த கீழ்கண்ட பகுதியை நீங்களும் வாசித்துப்பாருங்கள்
 
(“Recently, the federal government offered 50 prime beachfront plots in Trincomalee to be developed into new hotels. The plots were virtually free, Vigneswaran said, yet no Tamils bid for them, even after he attended a December meeting in Vienna with a group of Tamil expats and pleaded with them to invest.
“They asked what promises we could offer that the government wouldn’t take their money,” Vigneswaran said. “I said, ‘well what promises did the L.T.T.E. give you when you were giving them money?’ They didn’t answer. And they didn’t invest.”)

“அண்மையில் மத்திய அரசாங்கம் திருகோணமலையில் 50 நிலத்துண்டுகளை கிட்டத்தட்ட இலவசமாகவே வழங்கவிருந்ததாக திரு விக்னேஸ்வரன் கூறுகிறார்.  இவை உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை கட்டுவதற்கான இடங்களாகும்.  ஆயினும் ஒரு தமிழரும் அந்நிலத்தை  வாங்கிப்  புதிய விடுதிகளை அமைக்கும் முதலீட்டைச் செய்யத் தயாராக இல்லை.  கடந்த டிசம்பரில் வியன்னாவில் நடந்த தமிழ் முதலீட்டாளர்களுக்கான ஒன்று கூடலில்  திருகோணமலையில் முதலிடும் படி தாம் கெஞ்சியதாகவும் ஆனால் எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

அரசு தங்களது முதலீட்டையும் காசையும் எடுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் தரமுடியும் என தமிழ் முதலீட்டாளர்கள் கேட்டதாகவும் தான் அதற்கு “விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகளைத்  தந்ததினால் நீங்கள் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள்” எனவும் கேட்டதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.  தான் கேட்ட கேள்விக்கு தமிழ் முதலீட்டாளர்கள் எந்தப்பதிலையும் தரவில்லை எனவும் கூறினார்.”
 
சனநாயகப் பாதைக்கு திரும்பிய பழைய போராளியின் செயலாளர் கேட்கிறார்
“விடுதலைப்புலிகள் என்ன வாக்குறுதிகள் தந்ததனால் அவர்களுக்கு காசு கொடுத்தீர்கள் “ என்று.

புலிகள் மக்களிடம் அவர்களின் சுய விருப்புடனும் சுய விருப்பமில்லாமலும் உதவிகளைப்பெற்றுக்கொண்டார்கள்.( இது தொடர்பாகவும் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.)
 
விக்னேஸ்வரன்  விடுதலைப்புலிகள் மாதிரித் தாங்களும் காசு வேண்ட விரும்புகின்றாரா? எந்த வாக்குறுதிகளும் தரமாட்டோம் ஆனால் “விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்தமாதிரி” எங்களுக்கும் தாருங்கள்; வந்து முதலிடுங்கள்  என்கிறாரா?

புலிகள் தமீழீழம் பெற்றுத்தருவோம் என்று வாக்கு கொடுத்தார்கள். அந்த வாக்கை திரு விக்கினேஸ்வரன் கொடுத்திருந்தால் சிலவேளை புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலிட்டிருப்பார்கள்.

முதலாளித்துவ சனநாயக அரசொன்று முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை  தமிழ் முதலீட்டாளர்கள் கேட்கும் போது புலிகளை ஏன் அதற்குள் இழுக்க வேண்டும்?

யுனி லீவருக்கும்  எயர்ரெல்லுக்கும் அமேரிக்க லெவிக்கும் கொடுக்கும் முதலீட்டுப் பாதுகாப்பு உத்தரவாதத்தை தமிழர்களுக்கு தர முடியாதவர்களுக்கு புலிகளைக்குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது.

அரசினதும்  அரசாங்கத்தினதும்  பாத்திரமும்  பணியும் அறியாதவர்கள் ஆளும் நாடே இலங்கை.

இதே கட்டுரையில் கட்டுரையாளர் விடுதலைப்புலிகளை .இந்த நாட்டின் வளர்ச்சியை பல வருடங்களா தடுத்து நின்ற ஈவிரக்க மற்ற பிரிவினை வாதிகள் என்கிறார் ( the cold‐blooded separatist group that paralyzed the country’s progress for so many years...,)  இப்படியொரு பெயரை விடுதலைப்புலிகள் பெற்றுக் கொண்டது தற்செயலான சம்பவம் அல்ல. எல்லா வகையான முரண்பாடுகளையும் ஆயுத முனையில் தீர்த்துக் கொள்ள முனைந்ததன் பலனே அவர்கள் இந்தப்பேரை பெற்றுக் கொண்டமைக்கு காரணமாகும்.

அந்த அடிப்படையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தொனியை இரண்டாவது கட்டுரை புலப்படுத்துகிறது.

கடந்த  முப்பது வருடங்களாக கற்றுக்கொண்ட பாடத்தை ஒரு நொடியில் மறந்து போய் இன்றைக்கு மீளவும்  தோன்றிஇருக்கிற சுயநலன்கள் , துரோகங்கள் முரண்பாடுகளுக்கெல்லாம் பிரபாகரனின் ஆயுதம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே அதன் மூலம் இவற்றையெல்லாம் அடக்கி விட்டிருக்கலாமே என்னும் ஆதங்கதினை இரண்டாவது கட்டுரை வெளிப்படுதுகிறது.
கீழே உள்ள மேற்கோளைக்கவனியுங்கள்:
 
“ஆனால் தற்போது தலைவர் பிரபாகரன் அவர்களின் துப்பாக்கிகளில் இருந்த அதிகாரங்கள் இல்லாமல் போய்விட்டனவோ என்ற எண்ணத்தில் பல விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் கூறித்தான் நமது வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அணுவளவும் இல்லை....1

இவற்றையெல்லாம் பார்க்கையில் நமது விடுதலை நமது தேசியம் என்ற கொள்கைகளுக்கு முன்னர் முன்னுரிமை கொடுக்கப்பட்டனவா அல்லது தலைவர் பிரபாகரனின் துப்பாக்கிகளில் இருந்த பிறந்த அதிகாரங்கள் தற்போது பறந்து போய்விட்டன என்ற எண்ணம் இவர்களுக்கு வந்து விட்டனவா என்று உதயன் கேட்கும் வாரமாக இந்த வாரம் உள்ளது....2””
 
நாடு கடந்த அரசு  விடுதலைப்புலிகளின் தொடர்சியே ஆயினும்  தனக்குள் ஒரு சனநாயகப் பொறிமுறையைக் கடைப்பிடிக்க முனைவதாகத் தோன்றுகிறது. இது ஆரோக்கியமானது. நாடு கடந்த அரசுக்கு எதிராக எடுக்கப்படுகிற எந்த நடவடிக்கையையும் அது சனநாயக வழியிலேயே எதிர் கொள்ள வேண்டும்.

துப்பாக்கி முனையில் கட்டப்பட்ட தேசியம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை அதற்கு விலை கொடுத்த மக்கள் அறிவர்.

இக் கட்டுரையில் துப்பாக்கி முனையில் இருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோவின் கூற்று  மிகவும் எளிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும்  தற்போது  மாவோவின் துப்பாக்கி சீனாவில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் யாவரும் அறிவர்.
 
தமீழீழ விடுதலைப் போராட்டம்  தொடங்கிய  காலத்திலும் இப்போதுள்ளதைப்போலவே ஒற்றுமையின்மையும்  சுயநலன்களும்  இருந்தன. எப்பொழுதும் எல்லோருடைய கருத்துக்களும் ஒன்றாக இருப்பதில்லை. முரண்பாடுகளூடும் பொது நோக்கத்தை நோக்கி சேர்ந்து வேலை செய்யும் சனநாயகப்பொறிமுறையை ‐அதற்கு ஆயிரம் வருடங்கள் ஆனாலும்  உருவாக்க வேண்டும். அது மட்டுமே தமிழ்த்தேசியம் என்னும் கருவையும் அதன் இயக்கத்தையும் இருப்பையும் காப்பாற்றும்.
 
விடுதலைப்புலிகளையே காப்பாற்றாத துப்பாக்கி யாரைக்காப்பாற்றும்?

தேவன்:‐
அபிப்பிராயங்கள்
RSS comment feed
(2) அபிப்பிராயங்கள்
06-11-2010, 08:10
 - Posted by tamiliam
Thevan,"Piramaatham" If we travel in the democratic path, all other selfish-money hunger-powerhunger groups will eventually disapper.There are lot of tamils think that if there is a wedding he must be the bride and if there is a funeral he must be the dead body-all they need is popularity-for that they are prepared to do any thing. God bless us we tamils.
06-11-2010, 08:10
 - Posted by YOGA.S
ஏறத்தாள இருபத்தைந்து ஆண்டுகளாகவேனும் பிரபாகரனின் துப்பாக்கி தமிழ் மக்களை மட்டுமல்ல,நிலத்தையும் காத்தது வரலாறு!மறைக்கவோ,மறுக்கவோ முடியாதது!காற்றடிக்கும் பக்கம் சாய்வோருக்கு பிரபாகரனின் துப்பாக்கி இப்போது ஓய்ந்திருப்பதால் வாய்ச் சவடால் விட வசதியாயிருக்கிறது போலும்!நடைபெறும் சம்பவங்கள் மீண்டும் அந்தத் துப்பாக்கியின் தேவையை உண்ர்த்தியே நிற்கின்றன!காலம் பதில் சொல்லும்!வெறும் வார்த்தை அலங்காரமல்ல!மாறி வரும் உலகில் எதுவுமே மாறலாம்!பறித்தெடுக்க உதவியவர்களே வாங்கிக் கொடுக்கவும் கூடும்!இன்ஷா அல்லா!!!!!!!!எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக