பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2007

அறியாததும் உணராததும்

ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை
பள்ளியில்;
ஒன்றா இரண்டா காதல்
உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை
பெறுபேற்றுப் புள்ளியில்;
பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய
பன்னெடும் காலத்தோழமை பிரிய
பின்னிரவின் பழுவை
அன்றெழுந்த நிலவில்;
வாழ்க்கையைத்
தாரழிந்து தடம் சிதறிய வழியெங்கும்
உருக்குலைந்தோடும் மனிதரில்;
காணாமல் போனவர்களைக்
காலத்தின் மேனியில் கதியற்றுச் சிதைந்தவர்களைக்
கதையற்றுக் கண்ணீரையும் விழுங்கி
இறுகிய விழிகளில்;
நீதியற்ற காலத்தின் நாசத்தை
போரில்;
போரைப் போய் வெடிக்கும்
பிஞ்சுகளில்;
உணர்ந்துகொண்டேன்

உண்மைகளின் வலியையோ
இப்பெரு வெளியிலே தனித்தபோது உணர்ந்துகொண்டேன்.
இன்னும் அறியாததும் உணராததும் எதேனுமிருக்குமென்றால்

அதுவே...

யாரொடு நோகவென்றும் யார்க்கெடுத்துரைக்கவென்றும்...

புரட்டாதி 2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக