பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

பிரபஞ்சநதி

பிரபஞ்சநதியின் கரையில்
உனது மணம் பரந்திருந்தது.

நாடோடிப்பெண்ணின் சுதந்திரமான
கூந்தல் படர்ந்திருந்தது.

யுகங்களின் வெளியை நிரப்பும்
உன் நரம்பு வாத்தியத்தின் இசை போன்ற
உன் கண்களுக்குள்
இரவு மெளனமாக அடங்கிக் கிடந்தது.

நிலவு வனங்களின் மீது படர்ந்த போது
உணர்வுகள் பிரளயமாயின.

வானத்திற்கும்
ஈரித்திருந்த மண்ணுக்குமிடையில்
என் இதயம் மிதந்து சென்றது.

வாழ்க்கை உணரப்பட முடியாத
அதிர்வுகளின் சுருதியாயிற்று.

இருளும் மெளனமும் கலந்துயிர்கொண்டு
சிறுவெண்கூர்களாயிரம் சிறந்திருந்த
வான்நோக்கி எழுந்தன.

யாரும் நடந்திராத நதியின் கரையை
உனது நிர்வாணமும்
உனது வெப்பமும்
வியாபித்தன.

உன் காலடி நீண்டு செல்கிறது

நானோ
நீ விட்டுச் சென்றவொரு
மயிர் முடியிற் சிக்கிக்கிடந்தேன்.

ஆவணி 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக