பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2007

நான் எப்பொழுது இறந்தேன்

கனவின் பசிய இலைகள் உரசும்
காலம் நிறையும்
வேரடி மண்ணின் வாழ்வும்
பெயர்ந்தது.
குறுகியது இதயம்
தடக்கின வார்த்தைகள்
உதிர்தலும் குளிர்தலும் தாங்கி
துளிர்க்கும் துணிவைப் பெற்றன மரங்கள் மட்டும்.
காற்றும் மரமும் கலந்து பாட
கையேடும் கோலும் கொண்டு
கவிதை பெற்ற காலம்
கண்முன் சிரிக்கிறது.
ஓவென்றிரைந்த கடல்வழித் தெருவில்
என் காலடியோசை
மறைந்த நாளிலேதான்
நான் இறந்து இருக்க வேண்டும்.
பனியுறையும் இம்முகாமிலல்ல.

வைகாசி - 2002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக