பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2007

வசந்தம்

பூமியின் ஆழத்திலிருந்து காதல்
நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.
வேனிலின் அசைவற்ற மெளனத்தில்,
வெம்மையில்
ஒவ்வொன்றாக விழுகின்றன மலர்கள்.
நிலம் மறைகிறது.
ஏக்கம் கடலில் ஆவியாகி
விசும்பின் உயரத்தில் திரண்டு
விம்மி வெடிக்கிறது துயரமாக.
நெடுமூச்செறிந்து ஆவிபடரும் மண்ணின்
ஆன்மா அடங்குமோ!

துளிகள் சொட்டும் காலையில்
ஒற்றைக் குயிலின்
தீராக் குரலிலும் சிதைகிறது
வசந்தம்.

சித்திரை - 1995

3 கருத்துகள்:

  1. அன்பின் தேவாபிரா
    மீண்டும் ஒரு இடைவெளியின் பின்னர் இந்தப் பக்கம் வந்துள்ளேன்.

    முன்னரைவிடவும் தற்போது இந்தப் பக்கம் பார்வைக்கு இதமாகவும் அழகாவும் உள்ளது.

    உங்கள் கவிதை மொழி எப்பொழுதும் என்னை ஈர்ப்பதாக உள்ளது.

    ((பூமியின் ஆழத்திலிருந்து காதல்
    நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
    வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது))

    அழகான வெளிப்பாடு.

    பஹீமாஜஹான்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேவாபிரா

    ((பூமியின் ஆழத்திலிருந்து காதல்
    நெடுமரங்களின் வேர்களுட் புகுந்து மேலெழுந்து
    வசந்தத் துளிர்களின் நடுவில் மலர்களாகிறது.))
    அழகாக உள்ளது.

    எப்பொழுதும் உங்களின் கவிதை மொழி என்னை ஈர்க்கும்.

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்களால் புளகாங்கிதம் அடையாதார் யாருண்டு??
    நன்றி பாகிமா

    பதிலளிநீக்கு