பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2007

போதையும் கவிதையும்

நான் இன்று மது அருந்தினேன்.

நிறைந்த போதையில் கவிஞர்களுக்கு
தள்ளாட மட்டுமே முடியுமென்பீர்களோ?

இவ்விரவில் நிறைவடைந்த
காதலும் காமமும் மட்டுமே
என் வார்த்தைகளுக்குள் சிக்காதவை.
வார்த்தைகளுக்குள்ளவை சிக்குவதும் இல்லை!

வாழ்வின் ஆழம் தெரியாவிடின்
கவிதையாகவது வடிவதில்லை.
கண்ணுக்குத் தெரியும் விம்பங்களைக்
கவிதை நம்புவதுமில்லை.
கடுகிச் செல்லும் உலகின் மொழி
கவிதைகளின்றி வரண்டு போகிறது...
உலகின் துயரத்தைப் பேசும் வார்த்தைகள்
கவனிப்பாரற்றுச் சிதறிக் கிடக்கின்றன...

சிதறாத எண்ணங்களுடன்
என் கையெழுத்தோ தள்ளாடுகிறது.
போதை காற்றானால்
நானுமென்னெழுத்தும் ஏனாடக்கூடாது?

எல்லாவற்றையும் விற்கவும் வாங்கவும்
கற்பிற்கும் உலகில்
எவரும் விற்கவோ வாங்கவோ முடியாதது
நான் போதையில் எழுதிய இக்கவிதை!

மாசி 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக